மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி - மனைவியை காதலனோடு சேர்த்து வைத்த கணவன்.!
husband help to wife marriage with lover in maharastra
மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி - மனைவியை காதலனோடு சேர்த்து வைத்த கணவன்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீச்சிலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சனோஜ் குமார் சிங். இவருக்கும் பிரியங்கா குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 10-ந்தேதி திருமணமாகி நடந்துள்ளது.
புதுப்பெண்ணான பிரியங்கா திருமணத்திற்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் சனோஜை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா திருமணமாகி இருபது நாட்களுக்குப் பிறகு ஜிதேந்திராவுடன் ஓடிப்போக முயன்றுள்ளார். இதையறிந்த கிராம மக்கள் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு போலீசார் சம்பவம் குறித்து பிரியங்காவின் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல் நிலையத்திற்கு வந்த சனோஜ், அவர்களின் காதலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband help to wife marriage with lover in maharastra