மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தம்பதியினர்.! கிணற்றில் மூட்டையில் மிதந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தம்பதியினர்.! கிணற்றில் மூட்டையில் மிதந்த சம்பவம்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் அடுத்த புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனி-பீரம்மா தம்பதியினர். இவர்கள் இருவரும் காக்காவேரி பள்ளியில் உள்ள மாந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் கடந்த 7-ந் தேதி பீம்மாவின் சகோதரி சித்தம்மா வீட்டிற்கு சென்றனர்.

அதன் பின்னர் இருவரும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்தனர். மறுநாள் காலை சித்தம்மா அக்காவும் மாமாவும் வீட்டிற்கு சென்றுவிட்டார்களா? என்று கேட்பதற்காக முனி செல்போனிற்கு போன் செய்தார். ஆனால், முனி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சித்தம்மா சகோதரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. 

இதையடுத்து சித்தம்மா தனது அக்கா மற்றும் மாமாவை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து சித்தம்மா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே ஏர்ரகாணி பள்ளி என்ற இடத்தில் சாக்கு மூட்டையில் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையில் இருந்தவர்களின் உடல்களை மீட்டனர். உடல்கள் சிதைந்த நிலையில்  அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து போலீசார் இறந்தவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அதிலிருந்து சிம்மை வைத்து பார்த்ததில் இறந்தவர் முனி மற்றும் மனைவி பீரம்மா என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, இரவு நேரத்தில் இந்த வழியாக வந்தவர்கள் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இறந்து இருக்கலாம் என்றும் மின் வேலியில் சிக்கி இறந்ததை மறைப்பதற்காக நிலத்தின் உரிமையாளர்கள் சாக்கு மூட்டையில் பிணத்தை கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என்றுத் தெரிவித்தனர். கணவன் மனைவியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife died an electric fence in andira


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->