பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியது - இமாசல பிரேதச டி.ஜி.பி.தகவல்..! - Seithipunal
Seithipunal


இமாசல பிரேதச போலீசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பற்றி ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில், 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் இதுவரை பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பற்றி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பகுப்பாய்வில், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக, 895 வழக்குகள் அம்மாநிலத்தில் பதிவாகி உள்ளன. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பெருமளவில், பாதிக்கப்படுபவர்களுக்கு முன்பே நன்றாக தெரிந்த நபர்களாக உள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கின்றது. 

இந்த வகையில், 52.4 சதவீத பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நன்கு தெரிந்தவர்களே குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தவிர, நட்பின் வழியே அறிமுகம் ஆனவர்களால் 24.4 சதவீதமும், திருமணம் என்ற பொய்யான வாக்குறுதிகளின் பேரில் 16.9 சதவீதமும், லிவிங் டுகெதர் எனப்படும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும்போது 4.1 சதவீதமும் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களால் 2 சதவீதமும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. 

மேலே குறிப்பிடப்பட்ட பல வழக்குகள், சம்பவங்களை நடக்க விடாமல் முன்பே தவிர்க்க கூடிய வகையை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியது" இவ்வாறு இமாசல பிரேதச டி.ஜி.பி. செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachala pradesh research for sexul harassment


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->