பாஜகவால் கணக்கு காட்ட முடியும்.. காங்கிரசால் கணக்கு காட்ட முடியுமா? - அமித்சா பேச்சு.! - Seithipunal
Seithipunal


இமாச்சலபிரதேச மாநிலத்தில் வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவிடப்படும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அவற்றின் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. அதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூரில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். அப்போது அந்த பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியாவது, 

"காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநிலத்தின் முதலமைச்சராக வேண்டுமானால் நீங்கள் யாருடைய மகனாகவோ அல்லது மகளாகவோ இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் மன்னர்கள் மற்றும் ராணிகளின் கட்சி. மாநிலத்திற்கு செய்த வளர்ச்சி பணிகளை பாஜகவால் கணக்குகாட்ட முடியும் ஆனால், எவ்வளவு நாள் ஆட்சி செய்தோம் என்பதை கூட காங்கிரசால் கணக்கு காட்ட முடியாது' என்று அமித்ஷா பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachal pradesh election amithsha speach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->