கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த 4 நண்பர்கள்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் மைசூரு மெல்லஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(24). இவரும், அதே பகுதியை சேர்ந்தவர்கள் ரகு, சச்சின், கிரண் மற்றும் சங்கர் ஆகிய 5 பேரும் நண்பர்கள். இந்நிலையில் மனோஜ்க்கு பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக அவருக்கும், 4 நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டு நான்கு நண்பர்களும் சேர்ந்து மனோஜ் கொலை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை மனோஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நண்பர்கள் அவரிடம் தகராறு செய்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

பின்பு அங்கிருந்து நான்கு பேரும் தொப்பி ஓடியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது மனோஜ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நான்கு நண்பர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four friends who stabbed the young man to death in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->