ராஜஸ்தானில் அதிர்ச்சி - ஒரே வீட்டில் 5 பேர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பைகானேர் மாவட்டம் அந்தியோதயா நகரைச் சேர்ந்தவர்கள் ஹனுமான் சோனி - விமலா தம்பதியினர். இவர்களுக்கு மோஹித், ரிஷி என்று இரண்டு மகன்களும் கோதியா என்ற மகளும் உள்ளனர். 

இந்த நிலையில், ஹனுமான் சோனியின் வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல் பூட்டியே இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்த போது ஐந்து பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், ஒரே சமயத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples sucide in rajasthan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->