குஜராத் : நின்ற ரெயிலில் திடீர் தீ விபத்து - பதறியடித்து பயணிகள் ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் : நின்ற ரெயிலில் திடீர் தீ விபத்து - பதறியடித்து ஓடிய பயணிகள்.!

குஜராத் மாநிலத்தில் உள்ள போதட் ரெயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் கானப்பட்டது. 

இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரெயில் நிலையத்திலிருந்து தலை தெறிக்க ஓடினர். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் வருவதற்குள் ரெயில் நிலையத்திலிருந்த அதிகாரிகள் உடனடியாக தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து ஏற்படும் போது ரெயில் பெட்டியில் பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீசார் இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in train at gujarath


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->