மதுபோதையில் மிதந்த தந்தை! பறிபோன 45 நாளே ஆன பிஞ்சு உயிர்! அதிரடியில் இறங்கிய மக்கள்!
father arrested child murder case
ஆந்திரா, ஊத்தூலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் 2 வயதில் ஒரு மகன் மற்றும் 45 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தை உள்ளது.
ரமேஷ் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் நிர்மலா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ரமேஷ் நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு சென்று மது அருந்திவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 45 நாட்கள் ஆன குழந்தையை உதைத்ததால் குழந்தை தொட்டியில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு சுவற்றில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை தன் கண் முன்னாலேயே துடி துடித்து இறந்ததை பார்த்த தாய் கதறி அழுததில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரமேஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
father arrested child murder case