பெற்ற மகளையே சீரழித்த தந்தை மற்றும் தாய்மாமன்.. அதிரடி காட்டிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவருக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்த சிறுமியை மூன்றரை வயதில் இருந்தே மகன் என்றும் பாராமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் சிறுமியின் தாய் மாமனும் அவருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் தனது மகளை அருகில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காப்பக நிர்வாகிகள் மறையூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது தந்தையும், தாய் மாமாவும் சேர்ந்து கடந்த ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தந்தையை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and uncle sexual Harrasment for daughter


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->