#கேரளா || தொடர் குண்டுவெடிப்பில் 3 பேர் பலி! பின்னணியில் ஹமாஸ்? வெளியான அதிர்ச்சி தகவல்!!
Explosion in Christian worship meeting in Kerala
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மூன்று வாரங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் சுமார் 8,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மூன்றாம் உலகப்போர் துவங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாத குழுவின் தலைவர் காலித் மஷால் நேற்று காணொளி வாயிலாக கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
ஜமாத் இ இஸ்லாமின் இளைஞர் பிரிவான சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலித் கலந்து கொண்டு பேசியுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் கிறிஸ்துவ வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்த நிலையில் பல கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2300 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்துள்ளது.
கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட வழிபாட்டு கூட்டத்தில் வெடித்தது எந்த மாதிரியான குண்டுகள் என வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்லாமிய அமைப்பு நிகழ்ச்சியில் ஹமாஸ் தலைவர் கலந்து கொண்டு பேசிய பிறகு கேரளாவில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கேரள தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
Explosion in Christian worship meeting in Kerala