இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த எட்டு அகதிகள்.! திரிபுராவில் கைது.! - Seithipunal
Seithipunal


மியான்மர் நாட்டில் நடந்த உள்நாட்டு போரின் போது லட்சக்கணக்கான ரோகிங்கியா இஸ்லாமிய மதத்தினர் அகதிகளாக மாறி, மியான்மரில் இருந்து வெளியேறிய ரோகிங்கியாக்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் தஞ்சமடைந்தனர். 

அதன் பிறகு சட்டவிரோதமாக, இவர்கள் வங்காளதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநில எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து போலி ஆதாரங்களுடன்  வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, போலீசார் இந்தியாவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வரும் ரோகிங்கியாக்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகரில் ரோகிங்கியாக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக ராணுவ உளவுத்துறை மூலம் திரிபுரா மாநில போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் படி, மாநில போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தியதில், அகர்தலா ரெயில் நிலையத்தில் எட்டு ரோகிங்கியா அகதிகளை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட அனைவரும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஏஜெண்ட்கள் மூலம் திரிபுரா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, பின்னர், எட்டு பேரும் டெல்லி செல்வதற்கு திட்டமிட்டு, ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eight refugees arrested in tiripura


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->