மகாராஷ்டிரா || மருந்து வாங்கச் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர் - அதிரடி காட்டிய போலீசார்.!!.
doctor arrested for misbehave to young woman in maharastra
மகாராஷ்டிரா || மருந்து வாங்கச் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர் - அதிரடி காட்டிய போலீசார்.!!.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தனே மாவட்டம் பதல்பூர் அருகே இருபத்து மூன்று வயது பெண் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வசித்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியிலுள்ள கிளினீக்கிற்கு சில பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
இதற்கிடையே வெளியில் சென்ற பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த தாய் அவரை தேட ஆரம்பித்தார். இவருடன் சேர்ந்து அவருடைய மற்றொரு மகளும் தேடி வந்துள்ளார்.
அப்போது பெண்ணின் செருப்பு கிளினிக் வாசலில் இருந்ததை கண்டு பெண்ணின் தாயும் சகோதரியும் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு கிளினிக் மருத்துவர் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் மருத்துவரிடம் இருந்து பெண்ணை மீட்டு சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து மருத்துவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
doctor arrested for misbehave to young woman in maharastra