பணத்திற்காக பெற்றோரை தாக்கிய மகன்.! தந்தை உயிரிழப்பு.!
delhi son kill parents for money problam
மேற்கு டெல்லியில் பணத்திற்காக தந்தையை கொன்ற முப்பத்து நான்கு வயதுடைய நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். டெல்லியில் உள்ள பத்தே நகர் பகுதியில் வசித்துக்கு வரும் ஜஸ்தீப் என்ற நபர் பங்குச்சந்தையில் ரூ.7 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார்.
இதன் காரணமாக தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், பெற்றோர் அவருக்கு பணம் தர மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஜஸ்தீப் தனது தாய், தந்தை என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலால் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், ஜஸ்தீபின் தந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது தாய் சர் கங்காராம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து, ஜல்தீப்பை கைதுசெய்த போலீசர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
delhi son kill parents for money problam