டெல்லியில், அதிரடி உத்தரவிட்ட சுற்றுசூழல் அமைச்சர்..!
Delhi Environment Minister ordered
டெல்லியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தாண்டு, அக்டோபர் 24ம் தேதி, திங்கள் கிழமை அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சுற்றுசூழல் மாசுபாடு கருதி, டில்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க, வரும் ஜனவரி 1ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டாசு விற்பனை வியாபாரிகள் தெரிவித்ததாவது, ஓராண்டு காலமாக, உயிரை பணயம் வைத்து, தீபாவளி விற்பனைக்காக, தயார் செய்த பட்டாசுகளின் முதலீடுகள் வீணாகிவிடும் என்று கவலை தெரிவித்தனர்.
ஏற்கனவே, கொரோனா தொற்றினால், இரண்டு ஆண்டு காலமாக, விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பால், பட்டாசு விற்பனையாளர்கள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
English Summary
Delhi Environment Minister ordered