ராஜஸ்தான் : திருமண வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள புங்ரா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சியின் போது வீட்டில் திடீரென எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. திருமணத்திற்கு சமையல் தயாரித்துக் கொண்டிருந்தபோது எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 திருமண விருந்தினர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இந்த கோர விபத்தில் படுகாயமடைந்தவர்களில் கடந்த 2 நாட்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 42 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rises to 12 in marriage house cylinder explosion in rajasthan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->