கேரளா: 14 வயது தலித் சிறுமி பலாத்காரம்.! கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த சேர்தலா பகுதியை சேர்ந்தவர் சதீசன் (56). இவர் அப்பகுதியில் உள்ள சமுதாய கூட்டுறவு சங்க தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாகவும் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயதுடைய தலித் சிறுமி சமுதாய கூட்டுறவு சங்கத்திற்கு சென்றபோது சதீசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் பள்ளியில் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டபோது, சிறுமியை சதீசன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சதீசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு போலீசார் சதீசனை சேரலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

communist party leader arrested for rape 14 year old dalit girl in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->