தூங்கி கொண்டிருந்த மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர்.. கட்டி வைத்து அடித்த மாணவிகள்.!
College students attack head master for sexual Harrasment in Karnataka
கர்நாடகாவில் தனியார் கல்லூரி விடுதி மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை மாணவிகள் கட்டி வைத்து அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இதில் பணி புரியும் தலைமை ஆசிரியர் சின்மயானந்த் மூர்த்தி என்பவர் கல்லூரி விடுதிக்கு அருகில் உள்ள அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இரவில் மகளிர் விடுதியை மேற்பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்த தலைமை ஆசிரியர் நேற்று இரவு மதுபோதையில் மேற்பார்வையிட்டு உள்ளார்.
அப்போது விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவிகளுடன் தலைமை ஆசிரியர் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவிகள் அடுத்தடுத்து தகவல் கொடுத்த நிலையில், மாணவிகள் ஒன்று கூடி தலைமை ஆசிரியரை விடுதியிலேயே கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
College students attack head master for sexual Harrasment in Karnataka