கர்நாடகா || கல்லூரி மாணவி தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் உளிமாவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அஸ்விதா(23). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த அஸ்விதா தனது தோழியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

பின்பு அவருக்கும் அவரது தோழிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர். இந்நிலையில் திடீரென அஸ்விதா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அஸ்விதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஸ்விதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உளிமாவு போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student suicide in bangalore karnataka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->