கர்நாடகா : கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அபிஷேக்நகர் பகுதி ரயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் நேற்று இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த வாலிபர், நேரலகுண்டே பகுதியை சேர்ந்த சஷாங்(18) என்பதும், இவர் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவரது முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் இருந்ததால், இவரை யாரோ அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவரான சஷாங் எப்படி உயிரிழந்தார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student beaten to death in Karnataka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->