ராஜஸ்தானில் தற்கொலை செய்த சென்னை எஸ்ஆர்எம் மாணவர்.!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற மாணவர், சென்னை எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தற்கொலை செய்துகொண்டது இன்று காலை தெரிய வந்துள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களில் இது 3வது சம்பவம் என கோட்டா நகர் போலீஸார் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னதாக 18 வயதான நிஹாரிகா சிங் தனது ஜேஇஇ படிப்பின் சுமை தாங்காது, ஜனவரி 29 அன்று தற்கொலை செய்து கொண்டார். 

இதேபோல், 19 வயதாகும் முகமது ஜைத் என்ற மாணவர் தனது நீட் தேர்வு பயிற்சிக்கு மத்தியில் ஜனவரி 23 அன்று, தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் தொடர்ச்சியாக சென்னை கல்லூரி மாணவர் தற்கொலையும் சேர்ந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் பதிவாகி வருகிறது. இவற்றில் அதிகபட்சமான தற்கொலைகள் கடந்தாண்டில் பதிவாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai srm college student sucide in rajasthan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->