புர்கா அணிந்த நபர்களால் ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக்கொலை.!!
Burqa wearing men kill real estate agent
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசலு என்பவர் ஆளுங்கட்சியான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது கடப்பா நகரில் உள்ள சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் போல் வந்த இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை மறித்தனர்.
உடனே சீனிவாசலு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்து சீனிவாசலுவை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசலூர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அவரை விடாமல் துரத்திய இரண்டு பேரும் பட்டப் பகலில் அனைவரின் கண் முன்னே சீனிவாசலுவை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
அவ்வழியாகச் சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொலை சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சீனிவாசலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரிங்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக சீனிவாசலு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற இருவரையும வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Burqa wearing men kill real estate agent