மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு.!
Building collapsed in Maharashtra
மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு பகுதி திடீரென இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேர் இடிபாடுகளில் சீக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் 30 குடியிருப்புகளை கொண்ட அந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும், இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ஐந்து குடும்பங்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Building collapsed in Maharashtra