மது போதையில் நண்பன் வாயில் சிறுநீர் கழித்த கொடூர கும்பல்! - Seithipunal
Seithipunal


இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கி அவர் மீது சிறுநீர் கழிக்கும் பகீர் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த நவீன், ராமானுஞ்சேயலு இருவரும் கூட்டு சேர்ந்து அந்த பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இருவருக்கும் இடையிலான விரோதம் நாளுக்குநாள் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நவீன் மீது ராமானுஞ்சேயலு கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கடந்த 1 மாதத்திற்கு முன்பு நவீனை, ராமானுஞ்சேயலு மற்றும் அவருடைய கூட்டாளிகள் ஒன்றாக சேர்ந்து விரோதத்தை மறந்து நண்பர்களாக இருக்கலாம் எனக் கூறி மது அருந்த அழைத்துள்ளனர். இதனை நம்பி சென்ற நவீனை ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறத்தில் இருக்கும் காலி இடத்திற்கு அழைத்து சென்று அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்துள்ளனர்.

அதன் பின்னர், மூச்சு முட்ட குடித்து தள்ளாடிய நவீனை ராமானுஞ்சேயலு மற்றும் அவரது கூட்டாளிகள் கடுமையாக ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியுள்ளனர். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காததால், நவீன் முகத்தின் மீது சுற்றி நின்று சிறுநீர் கழித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அவர்களுடைய கூட்டாளிகளில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து நவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brutal gang urinated in friend's mouth while boozed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->