செல்போன் பார்த்து ஸ்கிப்பிங் செய்த சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சாகச வீடியோக்களை பார்த்து அதில் உள்ளபடியே விளையாட முயன்ற 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தனது அம்மாவின் செல்போனை பார்த்து ஸ்கிப்பிங் விளையாண்ட போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் வசித்து வரும் 10 வயது சிறுவன் சாகச வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், கடந்த புதன்கிழமை இரவு 7 மணி அளவில் தனது அம்மாவின் செல்போனை வாங்கி அதில் ஸ்கிப்பிங் எப்படி விளையாடுவது போன்ற வீடியோக்களை பார்த்துள்ளான்.

அதன்பிறகு வீடியோவில் உள்ள படியே ஸ்கிப்பிங் விளையாட முயற்சி செய்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கிப்பிங் கயிறு சிறுவனின் கழுத்தில் மாட்டி இறுக்கியுள்ளது. இதில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உள்ளான்.

அதன் பிறகு நீண்ட நேரம் தனது மகனை காணவில்லை என்று தாயார் சிறுவனின் அறைக்குள் சென்று பார்த்தபோது, மகன் கழுத்தில் கயிறு இறுக்கி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy play skipping in delhi death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->