கர்நாடகா : குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கும் மருந்தை சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு.!
boy ate the medicine to get rid of alcoholism died
கர்நாடகாவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கும் மருந்தை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம், சித்தாபாபுரா தாலுகா வாடி டவுனை சேர்ந்தவர் விஷ்ணு ஜாதவ் (8 வயது). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விஷ்ணுவின் தந்தை அதிலிருந்து விடுபட மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அந்த மருந்தை மிளகாய் பஜ்ஜியில் விஷ்ணுவின் தந்தை தடவி வைத்துள்ளார். அந்த நேரத்தில் மருந்து தடவிய வைத்திருந்த விலங்காய் பஜ்ஜியை விஷ்ணு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனாலும் கூட சிகிச்சை பலனின்றி சிறுவன் விஷ்ணு இறந்துவிட்டான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
boy ate the medicine to get rid of alcoholism died