அடேய்! ஒரிஜினல் போலீஸ் கிட்டயே வசூல் செய்து மாட்டிக்கொண்ட போலி போலீஸ் கும்பல்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் டெஸ்புரா நகரில் உள்ள பருவாஷாரெய்லி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கம்போல் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, போக்குவரத்து காவல்துறையினர் உடையணிந்து பேருந்தில் வந்த நபர் ஒருவர் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிராபிக் காவல்துறையினரிடம் தான் மூத்த அதிகாரி என்று கூறியுள்ளார். 

இதனை அடுத்து, அந்த நபர்‌ அவ்வழியாக சென்ற வாகனங்களை மறித்து சாலை விதிகளை மீறியதாக அபராதம் என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளார். சந்தேகமடைந்த  போக்குவரத்து காவல்துறையினர் இது குறித்து அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

இதன் பின்னர், அவர் விரைந்து வந்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த நபர் போக்குவரத்து காவல் துறையினர் உடை அணிந்து வாகன ஓட்டிகளிடம் பண வசூலித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam fake police arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->