பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. 3 ராணுவ வீரர்கள் பலி.!
Army vehicle overturned in the valley 3 soldiers killed
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின் போது ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சல் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தில் ஒரு இளநிலை அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.
அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பனியில் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கொடூர விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து உயிரிழந்த மூன்று வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Army vehicle overturned in the valley 3 soldiers killed