பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. 3 ராணுவ வீரர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின் போது ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சல் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தில் ஒரு இளநிலை அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர். 

அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பனியில் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கொடூர விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து உயிரிழந்த மூன்று வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Army vehicle overturned in the valley 3 soldiers killed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->