டெல்லியில் இறைச்சி விற்பனை செய்ய தடை.. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கண்டனம்.!
April 2 to 9 meat shop closed in Delhi
நவராத்திரி திருவிழா வின்போது டெல்லியில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிப்பதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.
நவராத்திரி திருவிழா ஏப்ரல் 2ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தெற்கு டெல்லி மாநகராட்சி இந்த ஒன்பது நாட்களில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நான் விரும்பும்போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது என்றும், அரசியலமைப்பு சட்டம் கடைக்காரர் இறைச்சி விற்பனையையும் அனுமதிக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் எனக்கு இறைச்சி உண்ணவும் கடைக்காரர் இறைச்சி விற்கவும் அனுமதித்துள்ள நிலையில், எப்படி இப்படி ஒரு முடிவை மாநகராட்சி எடுக்கலாம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
April 2 to 9 meat shop closed in Delhi