கிட்னி தானத்திற்கு, சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! தந்தைக்கு பேரதிர்ச்சி.!
Antha Women loss Money In Online
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி தனது தந்தைக்கு தெரியாமல் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். தந்தை அதை பார்ப்பதற்குள் எப்படியாவது சம்பாதித்து அந்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விட வேண்டும் என ஆன்லைனில் வேலை தேடி உள்ளார்.
அப்போது சிறுநீரகத்தை நன்கொடையாக கொடுத்தால் பணம் தருவதாக அவருக்கு லிங்க் வந்தது. இதை பார்த்து அந்த மாணவி தனது தகவல்களை கொடுத்து சிறுநீரக நன்கொடை அளிக்க காத்திருந்தார். மாணவியை தொடர்பு கொண்டு அறுவை சிகிச்சைக்கு முன் மூன்று கோடியும், அறுவை சிகிச்சை முடிந்த பின் மூன்று கோடியும் தருவதாக சில மர்ம நபர்கள் கூறினர்.
இதை நம்பிய மாணவி முன்பணமாக வரி செலுத்த வேண்டும். எனவே, 16 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை நம்பி அந்த மாணவியும் தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்த 20 லட்சத்தில் 16 லட்சத்தை அவர்களுக்கு செலுத்தியுள்ளார். தந்தை வங்கியில் இருக்கும் தொகையை செக் செய்த போது வெறும் 4 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வங்கி ஊழியர்களை கேட்டபோது மாணவி செலவு செய்தது தெரியவந்தது.
இந்த விஷயம் தெரிந்ததால் தலைமறைவாகிவிட்ட மாணவியை கண்டுபிடிக்க தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சிறுநீரகத்தை விற்கவில்லை எனக் கூறி தனது பணத்தை திருப்பித் தரும்படி அந்த மர்ம நபர்களிடம் கேட்டார். டெல்லியில் வந்து பணத்தை வாங்கிச் செல்ல அவர்கள் அழைத்தனர்.
அவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்ற அந்த பெண் அங்கே யாரும் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதற்குள் செல்போன் சிக்னலை வைத்து மாணவியை போலீசார் கண்டறிந்தனர்.
English Summary
Antha Women loss Money In Online