ஆந்திரா | மாமியார்-மருமகள் தகராறு! மனைவியின் வெறிச்செயல்! போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, பூஜாரி வண்டல பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி மம்தா (வயது 34). 

ஸ்ரீதர் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி விட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே இவரது அம்மாவுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் ஸ்ரீதரிடம் அவரது மனைவி, உங்கள் அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். 

ஆனால் ஸ்ரீதர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதர் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபோது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் மனைவியை சரமாரியாக தாக்கினார். 

பின்னர் தன்னுடைய அறையில் ஸ்ரீதர் தூங்கிக் கொண்டிருந்த போது சுமார் 1 மணி அளவில் மம்தா ஸ்ரீதர் அறைக்கு சென்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். 

மேலும் இதிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாத அளவுக்கு அவரது அறையின் கதவையும் பூட்டி வைத்து விட்டு தப்பி விட்டார். 

இதனால் ஸ்ரீதர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியதில் அவர் வலியால் அலறி துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஸ்ரீதர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

பின்னர் ஸ்ரீதரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் ஸ்ரீதரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து முடிவேடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மம்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra wife murder husband police inquiry


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->