குடும்ப தகராறு… 3 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு! பரபரப்பில் ஆந்திரா.!
Andhra mother suicide with children
ஆந்திரா, அன்னமய்யா மாவட்டத்திலுள்ள கலிவீடு கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம். இவரது மனைவி நாகமணி (வயது 30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நவமணிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதால் கோபமடைந்த நாகமணி தனது மூன்று குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள பாசன குலத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது 3 குழந்தைகளையும் முதலில் தள்ளிவிட்டு பின்னர் இவரும் குளத்தில் குதித்துள்ளார். இதில் நீரில் மூழ்கி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கப்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நாகமணியின் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Andhra mother suicide with children