ஆந்திரா | 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தை தற்கொலை: அம்பலமான உண்மை! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

நேற்று காலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்ட போது முரளி கிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பவானியை வெட்ட முயன்றார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவானி வீட்டில் இருந்து வெளியே ஓடினார். இருப்பினும் முரளி விடாமல் துரத்திச் சென்று பவானியை சரமாரியாக வெட்டிவிட்டு பின் வீட்டிற்கு வந்து தனது 2 மகள்களுக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்க வைத்தார். 

இதில் இளைய மகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கண்ட முரளி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பவானி மற்றும் மூத்த மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முரளி கிருஷ்ணன் மற்றும் அவரது இளைய மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முரளி கிருஷ்ணன் அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால் இந்த விபரீதம் முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் 2 மகள்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra 2 daughters poisoning died Father committed suicide 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->