திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி ஆதார் கட்டாயம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் பெற ஆதார் அட்டை இனி கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும், இனி வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற முடியாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhar card compulsory for Thirupathi temple tharisanam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->