காதலியை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய காதலன்.! பெங்களூருவில் பரபரப்பு.!
A lover who murder his girlfriend in bangalore
கர்நாடக திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால், காதலியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக காதலன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிங்கசந்திராவில் வசித்து வருபவர் பிரசாந்த். இவருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுனிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதில் பிரசாந்தை விட சுனிதா 3 வயது மூத்தவராவார். இருப்பினும் இவர்கள் இரண்டு பேரும் காதலித்து வந்ததுடன், திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பிரசாந்த் வீட்டில் சுனிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
ஆனால் சுனிதா தற்கொலை செய்து கொண்டதாக பிரசாந்த் கூறிய நிலையில், இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சுனிதாவுக்கு பிரேத பரிசோதனை செய்வதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் பிரசாந்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சுனிதாவை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதை பிரசாத் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் 4 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல இரண்டு பேரும் வாழ்ந்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுனிதா பிரசாந்தை வற்புறுத்தியதால், ஆத்திரமடைந்து சுனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து பிரசாந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A lover who murder his girlfriend in bangalore