ஒடிசாவில் கோர விபத்து: 2 லாரிகள் மோதியதில் 7 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவின் ஜாஜ்பூரில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் இருந்து கொல்கத்தா நோக்கி 7 பேருடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மசாலா காவல் நிலையத்திற்குட்பட்ட நியூல்பூர் சௌக் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவர்கள் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஜாஜ்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை உயர் அதிகாரி சஞ்சய் பட்நாயக் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 killed in two lorry collision in odisha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->