பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து - 7 பேர் பலி.! 10 பேர் காயம்
7 Killed 10 Injured As Truck Hits Pilgrims in Punjab
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடிந்தனர்.
பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள குரால்கர் சாஹிப்பில் தற்பொழுது நடைபெறும் "பைசாகி" பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பைசாகி பண்டிகைக்காக 17 பக்தர்கள் பாதை யாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது மலைப்பகுதியில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கர்ஷங்கர் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தல்ஜித் சிங் காக் கூறுகையில், இறந்தவர்களில் பெரும்பாலானோர் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மஸ்தான் கெராவைச் சேர்ந்தவர்கள் என்றும், விபத்து நடந்த பகுதி துணை மலைப் பகுதி என்பதால், சரிவில் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நடந்து சென்ற 17 யாத்ரீகர்கள் மீது மோதியதாக தெரிவித்துள்ளார்.
English Summary
7 Killed 10 Injured As Truck Hits Pilgrims in Punjab