மகாராஷ்டிரா : 15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் கர்ஜத் தாலுகாவுக்கு உட்பட்ட கோபர்டி கிராம பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன், நேற்று மாலை 4 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர், உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் இதர மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நள்ளிரவு வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்றும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர், சமீபத்தில் அகமத்நகரில் குடியேறியதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 year old boy dies who falls into 15 feet deep borewell in Maharashtra


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->