பீகாரில் இடி, மின்னல் தாக்கியதில் 5 உயிரிழப்பு.!
5 killed in Bihar due to thunder and lightning
பீகாரில் மாநிலத்தில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக பல்வேறு இடங்களில் இடி, மின்னல் தாக்கியதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 5 உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
English Summary
5 killed in Bihar due to thunder and lightning