#மேற்குவங்கம் || பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 3 பேர் பலி, 4 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ராவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் திடீரென இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் சாம்பல் புகை மூட்டம் காணப்பட்டது. இதையடுத்து இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் இந்த பயங்கர வெடிவத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மாதம் பட்டாசு ஆலையில் சோதனை செய்யப்பட்டு அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்ந்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed 4 injured in cracker factory blast in west bengal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->