திருமணத்திற்கு சென்றபோது பரிதாபம்.! கார்-டிரக் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கரில் காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்-பட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார்  புரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்தாரா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாரா விதமாக அவ்வழியாக வந்த டிரக் மீீது நேருக்குவிபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 5 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய டிரக் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 killed in car truck collision in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->