ரத்தத்தை இன்னொருவருக்கு ஏற்றும் பொழுது அதன் வகையை அறிதல் ஏன்? - Seithipunal
Seithipunal


ஒருவரின் இரத்தத்தினை இன்னொருவருக்கு ஏற்றும் பொழுது இரத்தத்தின் வகையை அறிதல் ஏன்?

 மனிதரில் உள்ள குருதி நான்கு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. A, B, AB, O என்பனவே அவையாகும். ஒரு இனக் குருதி உள்ளவருக்கு அதே இனக் குருதியை தான் செலுத்த முடியும்.

 AB இனக் குருதியை உடையவருக்கு எந்த வகைக் குருதியையும் செலுத்த முடியும். இவர் பொது வாங்கி எனப்படுவார். ஆனால், இவரின் குருதியை AB இனக் குருதியை உடையவருக்கு மட்டுமே வழங்க முடியும்.

O இனக் குருதியை உடையவரின் குருதியை எல்லா இனக் குருதி உடையவர்களுக்கும் செலுத்த முடியும். இவர் பொது வழங்கி எனப்படுவார். ஆனால், இவருக்கு O இனக் குருதியை மட்டுமே செலுத்த முடியும்.

குருதி இனம் மட்டுமன்றி குருதி வகையும் கவனிக்கப்பட வேண்டும். Rh Neh, Rh எதிர் என இரு வகைக் குருதியுண்டு. முதல் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது இவ்வகையைக் கவனிக்காது விடலாம்.

ஆனால், இரண்டாம் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது அல்லது கர்ப்பமுற்றோர், பிள்ளை பெற்ற பெண்கள் போன்றவர்களுக்கு முதல் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது இவ்வகைகளை கவனிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blood group donation information  


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->