நலன் தரும் முத்திரை: காது சம்மந்தமான பிரச்சனைகள் உள்ளதா? அப்போ அவசியம் இந்த முத்திரை செய்யுங்கள்..! - Seithipunal
Seithipunal


பஞ்சபூதங்களில் ஆகாயம்தான் பிற சக்திகளான நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்றுக்கு இடம் அளிப்பது. நமது உடலில் காது ஆகாய சக்தியின் வெளிப்பாடாக உள்ளது. காது, மூட்டு, இதயம் சார்ந்த தொந்தரவுகளைச் சரிசெய்ய ஆகாய முத்திரையைப் பயன்படுத்தலாம்.

ஆகாய முத்திரை:

தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம்.

கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும் 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.

பலன்கள்:

காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்னைகளுக்கு முதலுதவிபோல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.

அதீத உற்சாகம், அதிக துக்கம், கவலை, பயம், அதிக படபடப்பு, அதிக சிந்தனை கட்டுக்குள்வர இந்த முத்திரை உதவும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aakaya muthra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->