வேலை தேடுபவரா நீங்கள்... நாளை சென்னையில் மாபெறும் வேலைவாய்ப்பு முகாம்..பயன்படுத்தி கொள்ளுங்கள்..! - Seithipunal
Seithipunal


வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளி வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கபடுகிறது.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (08/07/2022) நடைபெற உள்ளது.  இந்த முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ,  கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை - 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளஉள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை நடைபெற உள்ளது.

இதனை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் 'வேலைவாய்ப்பு வெள்ளி' அனுசரிக்கப்பட்டு வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி வழங்கப்பட்டு வருகிறது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggest employment camp tomorrow in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->