விஜய்க்கு நன்றி சொன்ன விஷால்: இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடிகர் கமலஹாசன் சமீபத்தில் ரூ. 1 கோடி நிதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிக்கு நடிகர் விஜய் ஒரு கோடி வழங்கினார். 

அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதற்காக தென் இந்திய பொதுச் செயலாளர் பதவியில் உள்ள நடிகர் விஷால் இன்று அவரை நேரில் சென்று பார்க்க சென்றார். 

மேலும் அவர், நன்றி என்பது இரண்டு வார்த்தைகளை குறிக்கிறது. ஆனால் ஒரு நபர் தனது இதயத்தில் இருந்து அதை செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். நடிகர் சங்கம் கட்டிட பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை வழங்கிய எனக்கு பிடித்த தளபதி விஜய் அண்ணாவை பற்றி பேசுகிறேன். 

ஆம் உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமை அடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும் படி எங்களை தூண்டி விட்டீர்கள். நன்றி நண்பா என நடிகர் விஷால் தனது சமூகதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal thanked Vijay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->