விக்ரம் ரசிகர்கள் மீது தடியடி.. திருச்சியில் ஏற்பட்ட பரபரப்பு.!
Vikram fans attacked by Police
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்காநொடிகள் மற்றும் டி.மான்டி காலனி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக கோப்ரா படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இதில் கேஜிஎப் பட புகழ் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தின் இசை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கொண்டு இருக்கிறது. எனவே, கோப்ரா படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இதில் நிறைய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது. அத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதன் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நாளை கோவையில் ரசிகர்கள் சந்திப்பும், பின் 25 ஆம் தேதி சென்னையில் கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது. அதுபோல இன்று மதுரை மற்றும் திருச்சியில் முகாமிட்டு ரசிகர்களை சந்தித்து உரையாட திட்டமிடபட்டது.
சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு விக்ரம் வந்தபோது அவரை காண நிறைய ரசிகர்கள் கூட்டம் கூடியது. அப்பொழுது கூட்டத்தை கட்டுப்படுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Vikram fans attacked by Police