வீட்டை விட்டு ஓடிப் போன விஜய்.? அடக்கோடுமையே.. தந்தை பகிர்ந்த தகவல்.!
Vijay leave his home In 1992
நடிகர் விஜய் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபல நடிகராக இருந்து வருகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.
இதற்கு அடுத்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விஜய் 67 என்று குறிப்பிடப்படும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவாகிய மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த விஜய் 67 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இத்தகைய நிலையில் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது, " விஜய் கடந்த 1992 இல் வீட்டை விட்டு ஓடி விட்டார். முதன் முதலில் என்னிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விஜய் கேட்டபோது நீ ஒரு டாக்டர் ஆக வேண்டும்.
உனக்கு நான் மருத்துவமனை கட்டித் தருகிறேன் என்று வற்புறுத்தினேன். எனவே அது பிடிக்காமல் விஜய் வீட்டை விட்டு ஓடி விட்டார். பின் உதயம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்து நாங்கள் போய் அழைத்துக் கொண்டு வந்தோம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay leave his home In 1992