'எச்சரிக்கையா தான் இருந்தேன்.. ஆனாலும்,' வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ.!
varalaxmi about her quarantine time
கொரோனாவால் வரலட்சுமி சரத்குமார் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தான் எப்படி தனது நேரத்தை செலவிடுகிறேன் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழில் முக்கிய நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகைய நிலையில், அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், "தான் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். இருப்பினும்., எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவருமே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகத்தோடு கொரோனாவை டீல் செய்ய விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ள நிலையில், செல்ல நாயுடன் சேர்ந்து அவர் செய்கின்ற சேட்டைகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு விரைவில் குணமாகும் என்று வாழ்த்தியுள்ளனர்.
English Summary
varalaxmi about her quarantine time