கண்களை மூடினாலும் பாடல் வலியாக நீதான் - வைரமுத்து உருக்கமான வீடியோ வெளியீடு.!!
Vairamuthu video about SPB
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, சென்னையில் உள்ள எம்.எம்.ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் தினமும் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறார். தற்போது முன்பை விட அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மருத்துவர்களிடம் பெருவிரலை உயர்த்தி காட்டுகிறார். அவருக்கு டாக்டர்களை அடையாளம் தெரிகிறது. தொடர்ந்து வெண்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்பு இருந்ததை விட தற்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். மருத்துவர்களும் இதை நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். அவர் முழுமையாக குணமடைவது ஓரிரு நாட்களில் நடந்து விடாது. ஒரு வாரமும் ஆகலாம். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார் என எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து எஸ்.பி.பி விரைவில் நலம்பெற வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோவில், " எஸ்.பி.பி அவர்களே, எங்களின் வாழ்வின் அன்றாடமே, நீங்கள் மீண்டும் வர வேண்டும்.. என் முதல் பாடல் மற்றும் கடைசி பாடலை நீயே பாட வேண்டும். எனது 40 வருட திரையுலக வாழ்க்கையில், முக்கிய அங்கம் நீ..
இந்த உலகம் முழுவதும் இன்பம் மட்டுமே கொடுத்து உதவிய நீ, மீண்டு வா.. பாட்டு குயிலே, சிறகை விரி.. மீண்டு வா... இசையுலகை ஆழ வா.. பாடல் ராஜாவே, இங்கு கண்ணீரால் நிரம்புகிறதே.. எங்களின் கண்களை மூடினாலே பாடல் வழியாக நீதான்.. உங்களுக்காக இசையுலகமே காத்துகொண்டு இருக்கிறது " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Vairamuthu video about SPB