பிரசாந்த் படத்தில்.. பாதியில் ஹீரோயின் மாற்றப்பட்ட சம்பவம்.! அந்த 2-வது நடிகை இவரா.?! சுவாரஸ்ய வரலாறு.! - Seithipunal
Seithipunal


பொதுவாக சீரியல்களில் தான் ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு பதிலாக வேறொரு நடிகையையோ நடிகரையோ மாற்றுவதை  கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சினிமாவிலும் அப்படி ஒரு சம்பவம்  நடந்திருக்கிறது. அந்த சம்பவம் நடந்தது டாப் ஸ்டார்  பிரசாந்த் நடித்த திரைப்படத்தில்தான்.

1993 ஆம் ஆண்டு வெளியான தொளி முத்து என்ற தெலுங்கு  திரைப்படத்தில் பிரசாந்த் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக பாலிவுட் நடிகை திவ்ய பாரதி ஒப்பந்தம் செய்யப்பட்டு  படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்திருந்தார்.

பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாக  தெரியவந்தது. மேலும் அவரது மரணம் இன்று வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது. இந்தப் படப்பிடிப்பு முக்கால்வாசி நிறைவடைந்த நிலையில் கதாநாயகி மரணமடைந்ததால் படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

அதன் பிறகு தான் அவரைப் போன்றே தோற்றம் கொண்ட  நடிகை ரம்பாவை நடிக்க வைத்து மீதியிருந்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தனர். அந்தத் திரைப்படம் தமிழில் 'இளம் நெஞ்சே வா' என்ற பெயரில் வெளியாகிறது. திவ்யா பாரதியின் புகைப்பட பார்க்கும்போது 16 வயது ரம்பாவை போலவே இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The shooting of Prashant which was complicated by the shock caused by the actress happened 30 years ago


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->