கருப்பி.. சுருட்டைன்னு சொல்வாங்க.. சாய் பல்லவிக்கு ஆதரவாக ஆளுநர் தமிழிசை.! - Seithipunal
Seithipunal


நடிகை சாய் பல்லவி தமிழில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். இவரது நடிப்பில் மலையாளத்தில் பிரேமம் என்ற படம் வெளியாகி தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து, சாய் பல்லவி என்.ஜி.கே மற்றும் பாவ கதைகள் போன்ற நிறைய படங்களில் நடித்திருக்கிறார். 

இத்தகைய நிலையில், சமீபத்தில் முகநூல் பக்கத்தில் ஒருவர் சாய்பல்லவி மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று அவரை படுமோசமாக விமர்சித்து இருந்தார். இது குறித்து பலரும் சாய் பல்லவிக்கு ஆதரவாக பேசி இருந்தனர். 

இத்தகைய நிலையில் இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு பேட்டியில், "இது போல உருவகேலிக்கு தானும் ஆளாகியிருக்கிறேன் என்றும், இந்த காயங்களை உதறிவிட்டு முன்னேறிச் சென்று உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 

ஆண்களை காட்டிலும் அதிக உருவகேலி பெண்களுக்குத்தான் என்றும், நமது முன்னேற்றத்தை தடுக்க முடியாமல் இப்படி ஒரு குறுக்கு வழியில் முன்னேற்றத்திற்கு இடையூறாக அவர்கள் இருக்கின்றனர், எனவே பெண்கள் இதனை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai support to sai pallavi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->